ஈராக்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் தற்கொலைப் படையினர் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர்.
மத்திய பாக்தாத்தில் உள்ள ஒரு பிரபலமான ஐஸ்கிரீம் கடையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் நள்ளிரவில் கார் வெடிகுண்டு வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரமலான் நோம்பு நோற்கும் இந்தச் சமயத்தில் தற்கொலைப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment