Saturday, 22 July 2017

பறக்கும் விமானத்தில் பப்பரப்பே என காலை தூக்கிப்போட்ட பெண்.. ஜன்னல் திறந்ததால் பெரும் ஷாக்

வாஷிங்டன்: விமானத்தில் வரும்போது முன்பக்கத்து சீட்டு காலியாக உள்ளது என்பதற்காக காலை தூக்கிப் போட்டு ஜன்னலை திறந்துவிட்டுள்ளார் ஒரு பெண் பயணி.

பெண் பயணியே இந்த போட்டோவை டிவிட் செய்துள்ளார். முதலில் சீட் காலியாக உள்ள படத்தையும், பிறகு தான் காலை தூக்கிப் போட்ட படத்தையும் போட்டுள்ளார். என்ன நடந்தது என சொல்லுங்கள் பார்ப்போம், பெரும் அச்சமூட்டும் சம்பவம் நடந்தது எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.

பிறகு அடுத்த டிவிட்டில் அவரே, தான் ஜன்னலை திறந்த கதையையும் சொல்லியுள்ளார். விமானம் அந்தரத்தில் பறந்தபோது இவ்வாறு, பப்பரப்பே என காலை தூக்கிப்போட்டு சிக்கலை இழுத்துவிட்டுள்ளார் ஜெஸ்சி சார் என்ற அந்த பெண்மணி.

இந்த டிவிட் பல ஆயிரம் பேர்களால், லைக், ரீடிவிட் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவிலிருந்து, சான் பிரான்சிஸ்கோவுக்கு விமானம் பயணித்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...