Tuesday, 30 May 2017

பாகுபலி பிரபாஸுக்கு மார்ச் மாதம் திருமணம்: பொண்ணு...


ஹைதராபாத்: நடிகர் பிரபாஸுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடித்ததால் பிரபாஸ் புதுப்பட வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை. மேலும் தனது திருமணத்தையும் தள்ளிப்போட்டார்.

பாகுபலிக்காக அனுஷ்காவும் தனது திருமணத்தை ஒத்தி வைத்தார்.

பாகுபலி படத்தில் நடித்தபோது அனுஷ்கா, பிரபாஸ் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் பற்றி தான் தெலுங்கு திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது.

பிரபாஸும், அனுஷ்காவும் ரீலில் மட்டும் அல்ல ரியலிலும் அம்சமான ஜோடியாக உள்ளனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவர்களின் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பிரபாஸுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அனுஷ்காவும் திருமண தோஷத்தை கோவிலுக்கு சென்று கழித்துள்ளார். ஆனால் பிரபாஸ் அனுஷ்காவை மணப்பாரா என்று தெரியவில்லை.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹாோ. இந்த படத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை ஹீரோயினாக்க நினைத்தார்கள். ஆனால் பிரபாஸோ அனுஷ்காவை ஹீரோயினாக போடுமாறு பரிந்துரை செய்துள்ளாராம்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...