Wednesday, 24 May 2017

வேறு பெண்ணை மணந்ததால் ஆத்திரம்.. ஆசிட் வீசிய காதலி.. பரிதாபமாக பலியான காதலன் !


விஜயவாடா: தன்னை காதலித்து ஏமாற்றியதால் காதலன் மீது முன்னாள் காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணிகண்ட்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது இலியாஸ். 24 வயதான இவர் அதே ஊரைச் சேர்ந்த ஹேமா பிந்து என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென அதே பகுதியைச் சேர்ந்த இலாஸ் என்ற மற்றொரு பெண்ணுடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இலியாஸ்க்கு திருமணம் நடந்துள்ளது. இந்த விவரம் ஹேமாவுக்கு தெரிய வர இதனால் கடுமையாக ஆத்திரமடைந்த அவர், காதலனை பலிவாங்க நினைத்தார்.

இதற்கிடையே ஷேக் முகமது இலியாஸ் நேற்று இரவு தனது திருமண ஆல்ப போட்டோவை கடையில் கொடுத்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த இலியாஸ்சின் காதலி தனது நண்பர் காசிம் உதவியிடன் தான் மறைத்து வைத்து இருந்த ஆசிட்டை காதலன் இலியாஸ். மீது வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்.

வலியால் அலறி துடித்த ஷேக் முகமது அருகில் உள்ள குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஹேமா பிந்துவையும் அவரது நண்பரையும் தேடி வருகின்றனர். காதலன் மீது காதலி ஆசிட் விசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...